அஜித் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ராகுல் தேவ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அதில், வேதாளம் படப்பிடிப்பு சமயத்தில் கொல்கத்தாவில் துர்கா பூஜையின் போது படத்தின் க்ளைமாக்ஸ் நடந்து கொண்டிருந்தது எனவும், அப்போது அஜித் தினமும் இரவு முழுவதும் பணிபுரிந்தபிறகு, 80 பேர் அடங்கிய ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் உப்புமா, இட்லி சமைத்துக் கொடுப்பார் எனவும் தெரிவித்தார்.
சமைப்பது என்றால் வெறும் மேற்பார்வை அல்ல, அவரே முன்னின்று அனைத்தையும் செய்வார் எனவும் ராகுல் தேவ் கூறியுள்ளார்.