மகாராஷ்டிராவில் மழை காரணமாகத் திருமணத்தை நடத்த முடியாமல் பரிதவித்த இந்து குடும்பத்தைக் கண்ட ஒரு இஸ்லாமியக் குடும்பம், தங்கள் மேடையைப் பகிர்ந்து திருமணத்தை நடத்தி வைத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
புனேவில் ஒரே மண்டபத்தின் உட்பகுதியில் ஒரு இஸ்லாமியக் குடும்பத்தின் திருமண விருந்து நிகழ்ச்சிக்கும், வெளியே இந்து குடும்பத்தின் திருமண நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது பெய்த கனமழையால் இந்து குடும்பத்தின் திருமண நிகழ்ச்சி தடைப்பட்ட நிலையில், அதைக்கண்ட இஸ்லாமியக் குடும்பத்தினர் தங்கள் மேடையைப் பகிர்ந்து திருமணத்தை நடத்த உதவி, மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றியுள்ளனர்.