ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தியத் தூதர் சிபி ஜார்ஜை சந்தித்து ஆலோசனை நடத்திய எம்பிக்கள் குழு, பின்னர் ஜப்பான் வெளியுறவு அமைச்சரைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அவர்கள் எடுத்துரைத்தனர். இந்த கூட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் குறித்து அனைத்துக்கட்சி எம்பிக்கள் ஒரே குரலில் பேசியதாகவும், இது இந்தியாவின் பன்முகத்தன்மையின் சக்தியைப் பிரதிபலித்ததாகவும் ஜப்பானுக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு ஜப்பான்தான் முதலில் கண்டன குரல் எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.