கேள்விக்குறியான வாழ்வாதாரம் : நத்தை வேகத்தில் நடக்கும் மேம்பால பணியால் தவிப்பு!
Jan 14, 2026, 07:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கேள்விக்குறியான வாழ்வாதாரம் : நத்தை வேகத்தில் நடக்கும் மேம்பால பணியால் தவிப்பு!

Murugesan M by Murugesan M
May 24, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடசென்னை பகுதியின் நுழைவாயிலான கணேசபுரம் சுரங்கப்பாதை மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆமைவேகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பல கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதோடு நூற்றுக்கணக்கான வணிகர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியிருக்கும் மேம்பாலப் பணிகள் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் இந்த கணேசபுரம் சுரங்கப்பாதை தான் வடசென்னையின் பிரதான நுழைவாயில். வியாசர்பாடி, கொளத்தூர், மாதவரம், கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், மூலக்கடை என பல்வேறு பகுதிகளுக்குச் செல்லக்கூடிய பொதுமக்களுக்குப் பிரதான வழியாகவும், முக்கியமான சுரங்கப்பாதையாகவும் இந்த கணேசபுரம் பாலமே அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு மழையின் போதும் கணேசபுரம் சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியிருப்பதும், அதனால் பாதையைக் கடக்க முடியாமல் தவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. பொதுமக்களின் நீண்டகால போராட்டத்திற்குப் பின் அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்த தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் அதற்காக 226 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியது.

2022 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த 18 மாதங்களில் மேம்பாலம் கட்டி முடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.  ஆனால் ஆமைவேகத்தில் நடைபெற்றுவரும் பணிகள் அப்பகுதி பொதுமக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதோடு அச்சாலையில் கடை வைத்திருந்த வணிகர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

மேம்பாலத்திற்கான பணிகள் தொடங்கிய பின் அப்பாதை அடைக்கப்பட்டிருக்கவைப்பதால் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திக்குள்ளாகி வருகின்றனர். பள்ளி, கல்லூரி செல்வோர், பணிக்குச் செல்வோர், அவசரத் தேவைகளுக்காக மருத்துவமனை செல்வோர் எனப் பலரும் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்குச் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேம்பாலம் அமைப்பதற்காக பணிகள் தொடங்கி மூன்றாண்டுகள் கடந்தும் 50 சதவிகித பணிகள் கூட நிறைவடையாமல் இருப்பது மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தையே வெளிப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஏற்பட்ட சுணக்கமே காலதாமதத்திற்குக் காரணம் எனவும், பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு விரைவில் மேம்பாலத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.

Tags: மேம்பாலம் அமைக்கும் பணிகள்வடசென்னைQuestionable livelihood: Suffering from the snail-paced bridge constructionகேள்விக்குறியான வாழ்வாதாரம்கணேசபுரம் சுரங்கப்பாதை
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவின் GOLDEN DOME : அதிநவீன வான்வெளி ஏவுகணை பாதுகாப்பு!

Next Post

சுற்றுலாப்பயணிகள் அதிருப்தி : மதுப்பிரியர்கள் கூடாரமான சாலையோர பூங்காங்கள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies