சென்னை கானத்தூர் அருகே கடல் அரிப்பு காரணமாகத் தவித்து வரும் மீனவர்கள், தங்களின் படகுகளை நிறுத்த அரசு சார்பில் இடம் வழங்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெட்டிக்குப்பம் மீனவ பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்குக் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் மதில் சுவர் இடிந்து விழுந்தும், வடிகால்வாய் கட்டுமானங்கள் சேதமடைந்தும் காணப்படுகிறது. மேலும், மீனவர்கள் தங்களின் படகை நிறுத்தி வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனால் தனியார் இடங்களில் படகுகளை நிறுத்தினால் தங்களின் படகுகளைச் சேதப்படுத்துவதாகக் கூறும் மீனவர்கள், அரசு சார்பில் இடம் வழங்கக்கோரியும், மண் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு அமைத்துத் தர வலியுறுத்தியும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.