சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பக்தர் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக 35 அடி உயரமுள்ள, ஒரு டன் எடையுள்ள ராட்சத அரிவாள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த ஐந்து நாட்களாக 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து இந்த அரிவாளைத் தயாரித்து வருகின்றனர். இதனை அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் பலரும் வேடிக்கை பார்த்தபடியே சென்று வருகின்றனர்.