விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அம்மச்சார் அம்மன் கோயில் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கீழ்மாம்பட்டில் உள்ள இக்கோயிலில் பிரம்மோற்சவம் மற்றும் தேர்த் திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்ட வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.