விழுப்புரம் காணை குப்பம் பகுதியில் காயமடைந்த புள்ளி மானை மதுப்பிரியர்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காணை குப்பம் டாஸ்மாக் அருகே பலத்த காயங்களுடன் காணப்பட்ட புள்ளி மானுக்கு மதுப் பிரியர்கள் தண்ணீர் கொடுத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறையினர் புள்ளி மானுக்குச் சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனர்.