கனடாவில் கடந்த ஆண்டில் பயங்கரவாத செயல்கள் 488 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
வன்முறை, தீவிரவாதம் ஆகியவை அங்குக் கடுமையான தேசியப் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல், 2024-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை 25 நபர்கள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்குக் கனடா ஆதரவளித்து வருகிறது. இந்நிலையில் அங்கு இந்து கோயில்களில் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.