மியான்மரில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க மலேசியா அழைப்பு விடுத்துள்ளது.
மியான்மரில் கடந்த மார்ச் 28ஆம் தேதி அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 3500 பேர் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிடும் பொருட்டு, உள்நாட்டுக் கலகக்காரர்களுடன் தற்சமயமாகப் போரில் ஈடுபடப்போவதில்லை என மியான்மர் ராணுவம் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த போர் நிறுத்தம் மே மாத இறுதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் மியான்மர் மக்களின் துன்பத்தைத் துடைக்கும் வகையில், அந்நாட்டு ராணுவம் போர் நிறுத்தத்தை நீட்டிக்க மலேசியா அழைப்பு விடுத்துள்ளது.