கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்திற்கு அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை சின்ன கல்லாரில் 23 செண்டி மீட்டர் மழைப் பதிவானது.
தொடர்ந்து நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளில் இறங்க வேண்டாமென மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.