ஜோலார்பேட்டை அருகே கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வக்கணம்பட்டியைச் சேர்ந்த திம்மராயன் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி அவருடைய அக்கா மகன் சக்கரவர்த்தி வெட்டி படுகொலை செய்தார்.
சொத்து பிரச்சனை காரணமாக, கொலை செய்த சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பிணையில் வெளியே வந்த சக்கரவர்த்தி பொன்னேரி பகுதியில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது, அவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது. இதனைத் தடுக்க முயன்ற அவரது மனைவி கௌரியையும் அந்த கும்பல் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றது.
இதில், படுகாயமடைந்த சக்கரவர்த்தி வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.