பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அகாலி தள கவுன்சிலர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. இக்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் ஹர்ஜிந்தர் சிங் பஹ்மான், சஹர்தா என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றார்.
அப்போது அவரை பின் தொடர்ந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், ஹர்ஜிந்தரை துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றது.
இதில் படுகாயமடைந்த ஹர்ஜிந்தர் சிங் பஹ்மான், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.