ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 நாட்களில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளிலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குப் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பொது தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 முதல் 8 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் கோயில் உண்டியலில் 6 கோடியே 90 லட்சம் ரூபாய் காணிக்கையாகக் கிடைக்கப் பெற்றதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதே போல 2 நாட்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாகவும், அதில் 80 ஆயிரம் பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்தி உள்ளதாகவும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.