கன்னியாகுமரி மாவட்டம் மலையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலையோர பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
பெருஞ்சாணி அணைக்கு ஆயிரத்து 81 கன அடியும், பேச்சிப்பாறை அணைக்கு ஆயிரத்து 397 கன அடியும் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. சிற்றாறு ஒன்று மற்றும் 2வது அணையிலும் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.