திருவண்ணாமலையில் பணம் செலுத்தாத அரசு பேருந்தை டோல்கேட் ஊழியர்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் காரியமங்கலம் டோல்கேட்டில் அரசு பேருந்தின் பாஸ்டேக் அட்டையில் பணம் இல்லாததால், பேருந்தை இயக்கவிடாமல் டோல்கேட் ஊழியர்கள் சிறை பிடித்தனர்.
இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். பின்னர், பேருந்தில் இருந்தவர்கள் சிறுசிறு தொகையைக் கொடுத்து, 400 ரூபாய் டோல்கேட் கட்டணம் செலுத்தினர்.