வான்வெளியில் புதிய சகாப்தம் : 5ம் தலைமுறை போர் விமான தயாரிப்பை தொடங்கிய இந்தியா!
Sep 10, 2025, 03:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வான்வெளியில் புதிய சகாப்தம் : 5ம் தலைமுறை போர் விமான தயாரிப்பை தொடங்கிய இந்தியா!

Web Desk by Web Desk
May 27, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக வான்வெளி அரங்கில் புதிய சகாப்தத்தைப் படைக்கப் போகும் மேம்பட்ட நடுத்தர ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைத் தயாரிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். உள்நாட்டு உற்பத்தித் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் தயாரிக்கப்படும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவின் பாதுகாப்புப் படையை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களைத் தயாரிக்கும் திட்டத்திற்குக் கடந்த 2024 ஆம் ஆண்டு ஒப்புதல் வழங்கிய மத்திய பாதுகாப்பு அமைச்சரவைக் குழு, அதற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியது. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களைத் தயாரிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நூற்றுக்கும் அதிகமான ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைத் தயாரித்து வைத்துள்ளன. துருக்கி, தென்கொரிய ஆகிய நாடுகளும் ஐந்தாம் தலைமுறை விமானப் போட்டியில் இந்தியாவை விட முன்னணியில் உள்ளன. இத்தகைய சூழலில் மற்ற நாடுகளுக்குச் சவால் விடுக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களைத் தயாரிக்கும் பணியில் இந்தியா களமிறங்கியுள்ளது.

உள்நாட்டு பாதுகாப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையில், பாதுகாப்புத்துறையை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்திலும் தயாரிக்கப்படும் இந்த போர் விமானங்கள் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

மற்ற போர் விமானங்களை ஒப்பிடும் போது குறைவான எடை கொண்டிருக்கும் இந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானம் எதிரி நாட்டின் ரேடார்களில் சிக்காத வகையில் தயாரிக்கப்படுகிறது. நான்காம் தலைமுறை விமானங்களை ஒப்பிடும் போது மேம்பட்ட, அதிநவீன சென்சார் தொழில்நுட்பம் சார்ந்த வசதிகளோடு இந்த விமானங்கள் வடிவமைக்கப்பட உள்ளன.

செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் இவ்வகையிலான விமானங்கள் ஒளியை விட வேகமாகப் பறக்கும் அளவிற்குச் சக்தி வாய்ந்ததாகவும் தயாரிக்கப்பட உள்ளன. குறைந்த எரிபொருளில் அதிகளவு தூரம் பறக்கும் திறன் உள்ளதோடு, வான்வெளி உலகில்  வீழ்த்தவே முடியாத அளவுக்கு இந்த போர் விமானங்கள் உருவாக்கப்பட உள்ளன.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ச்சியான பதட்ட நிலை நீடித்துக் கொண்டிருக்கும் நிலைக்கும், பெய்ஜிங்கின் வளர்ந்து வரும் ராணுவ சக்திக்கும் சவால் அளிக்கும் வகையில் இந்த ஐந்தாம் தலைமுறை விமானத்தை உருவாக்குவதில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இந்த மேம்பட்ட நடுத்தர போர் விமானங்கள் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி மற்றும்,பாதுகாப்புப் படைக்கு வலுசேர்ப்பதோடு, உலகளாவிய பாதுகாப்பு அரங்கில், இந்தியா வலிமையான நாடாக உருவெடுக்க உறுதுணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்இந்தியாA new era in space: India begins production of 5th generation fighter aircraft5ம் தலைமுறை போர் விமானம்வான்வெளி
ShareTweetSendShare
Previous Post

பின்னணி காரணம் என்ன? : அமெரிக்காவில் ஐ-போன் உற்பத்தி செய்யாத ஆப்பிள்!

Next Post

வடமாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies