வான்வெளியில் புதிய சகாப்தம் : 5ம் தலைமுறை போர் விமான தயாரிப்பை தொடங்கிய இந்தியா!
Jul 27, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வான்வெளியில் புதிய சகாப்தம் : 5ம் தலைமுறை போர் விமான தயாரிப்பை தொடங்கிய இந்தியா!

Murugesan M by Murugesan M
May 27, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக வான்வெளி அரங்கில் புதிய சகாப்தத்தைப் படைக்கப் போகும் மேம்பட்ட நடுத்தர ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைத் தயாரிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். உள்நாட்டு உற்பத்தித் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் தயாரிக்கப்படும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவின் பாதுகாப்புப் படையை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களைத் தயாரிக்கும் திட்டத்திற்குக் கடந்த 2024 ஆம் ஆண்டு ஒப்புதல் வழங்கிய மத்திய பாதுகாப்பு அமைச்சரவைக் குழு, அதற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியது. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களைத் தயாரிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நூற்றுக்கும் அதிகமான ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைத் தயாரித்து வைத்துள்ளன. துருக்கி, தென்கொரிய ஆகிய நாடுகளும் ஐந்தாம் தலைமுறை விமானப் போட்டியில் இந்தியாவை விட முன்னணியில் உள்ளன. இத்தகைய சூழலில் மற்ற நாடுகளுக்குச் சவால் விடுக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களைத் தயாரிக்கும் பணியில் இந்தியா களமிறங்கியுள்ளது.

உள்நாட்டு பாதுகாப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையில், பாதுகாப்புத்துறையை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்திலும் தயாரிக்கப்படும் இந்த போர் விமானங்கள் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

மற்ற போர் விமானங்களை ஒப்பிடும் போது குறைவான எடை கொண்டிருக்கும் இந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானம் எதிரி நாட்டின் ரேடார்களில் சிக்காத வகையில் தயாரிக்கப்படுகிறது. நான்காம் தலைமுறை விமானங்களை ஒப்பிடும் போது மேம்பட்ட, அதிநவீன சென்சார் தொழில்நுட்பம் சார்ந்த வசதிகளோடு இந்த விமானங்கள் வடிவமைக்கப்பட உள்ளன.

செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் இவ்வகையிலான விமானங்கள் ஒளியை விட வேகமாகப் பறக்கும் அளவிற்குச் சக்தி வாய்ந்ததாகவும் தயாரிக்கப்பட உள்ளன. குறைந்த எரிபொருளில் அதிகளவு தூரம் பறக்கும் திறன் உள்ளதோடு, வான்வெளி உலகில்  வீழ்த்தவே முடியாத அளவுக்கு இந்த போர் விமானங்கள் உருவாக்கப்பட உள்ளன.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ச்சியான பதட்ட நிலை நீடித்துக் கொண்டிருக்கும் நிலைக்கும், பெய்ஜிங்கின் வளர்ந்து வரும் ராணுவ சக்திக்கும் சவால் அளிக்கும் வகையில் இந்த ஐந்தாம் தலைமுறை விமானத்தை உருவாக்குவதில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இந்த மேம்பட்ட நடுத்தர போர் விமானங்கள் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி மற்றும்,பாதுகாப்புப் படைக்கு வலுசேர்ப்பதோடு, உலகளாவிய பாதுகாப்பு அரங்கில், இந்தியா வலிமையான நாடாக உருவெடுக்க உறுதுணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்இந்தியாA new era in space: India begins production of 5th generation fighter aircraft5ம் தலைமுறை போர் விமானம்வான்வெளி
ShareTweetSendShare
Previous Post

பின்னணி காரணம் என்ன? : அமெரிக்காவில் ஐ-போன் உற்பத்தி செய்யாத ஆப்பிள்!

Next Post

வடமாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

Related News

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies