டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – மும்பை அணிகள் மோதின. இதில், மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் விளாசினார்.
இந்த சீசனில் களம் இறங்கிய அனைத்து ஆட்டங்களிலும் குறைந்தது 25 ரன்கள் எடுத்துள்ளார். தன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 14 ஆட்டங்களில் 25 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவின் பவுமா தொடர்ந்து 13 ஆட்டங்களில் 25 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை சூர்யகுமார் யாதவ் முறியடித்தார்.