கோஸ்டாரிக்காவில் கொட்டி தீர்த்த கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.
கடந்த சில தினங்களாக நிக்கோயா, நோசாரா என பல்வேறு பகுதிகளில் இடைவிடாது பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாகச் சாலைகளில் ஆறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.