ஆபரேஷன் சிந்தூர் லோகோவை வடிவமைத்தவர்கள் யார்? என்பது குறித்த தகவலை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்திய ராணுவத்தைச் சேர்ந்த லெப்டினண்ட் கர்னல் ஹர்ஷ் குப்தா மற்றும் ஹவில்தார் சுரேந்தர் சிங் ஆகிய இருவரும் சேர்ந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ லோகோவை வடிவமைத்துள்ளனர்.
கடந்த மே 7-ந்தேதி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில், நள்ளிரவு 1.51 மணிக்கு இந்திய ராணுவத்தின் ‘எக்ஸ்’ தள பக்கத்தில் இந்த லோகோ வெளியிடப்பட்டது.