சென்னை தண்டையார்பேட்டையில் திருமண வரவேற்பு நிகழ்வில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர், தண்டையார்பேட்டையில் நடைபெற்ற தனது நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது சுபாஷ் சந்திரபோஸ் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு இசை கச்சேரியில் நடனமாடியுள்ளார்.
அப்போது தீடீரென மயக்கமடைந்து கீழே விழுந்த அவரை நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவி செய்து விசாரித்து வருகின்றனர்.