கன்னியாகுமாரி மாவட்டம் கோதையார் அருகே குடியிருப்பு பகுதிகளில் புகுந்து யானைகள் வீடுகளை சேதப்படுத்தி வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
களியல் வனசரகத்திற்கு உட்பட்ட கோதையார் அருகே மோதிரிமலை பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களில் 5 வீடுகளை யானைகள் சேதப்படுத்தியதால், அப்பகுதி மக்கள் அச்சம் காரணமாக அருகில் உள்ள மற்ற ஊர்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். எனவே, யானைகளை விரட்ட வனத்துறைக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.