டெல்லி கலால் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்க கோரி விண்ணப்பித்துள்ளார்.
இதுகுறித்த வழக்கை ஜூன் 4-ம் தேதிக்கு பட்டியலிட்டுள்ள டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கெஜ்ரிவாலின் பாஸ்போர்ட் கடந்த 2018ம் ஆண்டு காலாவதியாகிவிட்டதாக அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.