மதுரை மேயர் இந்திராணியின் கணவரும், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளருமான பொன்வசந்த் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் ஜூன் 1ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி மாவட்ட செயலாளர்களான அமைச்சர் மூர்த்தி, மணிமாறன், தளபதி ஆகியோர் தலைமையில் திமுகவின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதே நாள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை நடத்திய மேயர் இந்திராணி, அதிமுக ஆதரவுடன் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார். மேயரின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் அவரது கணவர் பொன்வசந்த் உள்ளார் என புகார் எழுந்த நிலையில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி பொன்வசந்த் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகளில் கட்சியினர் தீவிரமாக இருக்கும் நிலையில், அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது திமுகவில் நிலவும் உட்கட்சி பூசலை வெளிகாட்டுவதாக உள்ளது.