இன்று பிறந்த நாள் கொண்டாடும் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மனித வாழ்க்கை ஒரு சிறந்த பரிசு, மேலும் ஒருவரின் வாழ்க்கையை பொது நலனுக்காகவும், தேச சேவைக்காகவும் அர்ப்பணிப்பது ஒரு பாக்கியம் என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் எனது சக ஊழியராக, உங்கள் உறுதியான சிந்தனையுடனும், கடமையுணர்வுடனும் பணியாற்றுவதன் மூலம் நீங்கள் ஒரு சிறந்த பங்களிப்பைச் செய்கிறீர்கள் என்றும், உங்கள் முயற்சிகள் தொடர்ந்து மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
தேசத்தின் வளர்ச்சிக்காக முடிவில்லாத ஆற்றலுடன் நீங்கள் தொடர்ந்து பாடுபட்டு, எப்போதும் உயர்ந்த உயரங்களை அடைய வேண்டும் என்றும், வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல் குடியரசு தலைவர் விடுத்துள்ள பதிவில், கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து, தேசத்திற்குத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவை செய்ய ஆசீர்வதிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.