நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திறப்பு விழா கண்ட அன்றே பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது, கட்டுமானப் பணிகளின் தரமற்ற தன்மையை காட்டுவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள், சாலைகள் ஆகியவற்றின் தரம் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், பள்ளிபாளையம் பாலம் போக்குவரத்திற்கு உகந்தது தானா? என பாதுகாப்பு தர ஆய்வுகளையும் அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
மேலும் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த பாலத்தில் ஊழல் நடந்துள்ளதா? என விசாரணை நடத்த வேண்டுமென்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.