சேலம் மாநகராட்சியில் 12 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வழங்கப்படுவதாக அதிமுக கவுன்சிலர் புகார் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநகராட்சி கூட்டத்தில் பேசிய 60வது வார்டு அதிமுக கவுன்சிலர் யானை வரதன் தனது வார்டுக்கு 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுவதாகவும், திமுக கவுன்சிலர்களின் வார்டுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் குடிநீர் வழங்குவதில் மாநகராட்சி நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாக அவர் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.