தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை வழங்கியுள்ளது.
தங்க நகைக்கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதிநிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாட்டுகள் அடங்கி புதிய வரைவு விதிமுறைகளை ஆர்பிஐ அண்மையில் வெளியிட்டது.
நகைக்கடனில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க இந்த விதிமுறைகள் கொண்டு வந்திருந்தாலும் ஏழை, எளிய நடுத்தர மக்களும் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற விமர்சனம் எழத்தொடங்கியது.
இந்த நிலையில், குறுகிய தொகை நகைக்கடன் பெறும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் 2 லட்ச ரூபாய்க்கும் குறைவான நகைக்கடன் பெறுவோருக்கு தளர்வு அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
மேலும் புதிய விதிமுறைகளை அமல்படுத்த சிறிது காலம் அவகாசம் வழங்கும் வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இத்திட்டத்தை அமல்படுத்தலாம் எனவும் ரிசர்வ் வங்கிக்கு மத்திய அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.