கன்னியாகுமரி மாவட்டம், குன்னம்பாறை பகுதியில் கோயில் உண்டியலை திருட முயன்ற கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இக்கோயில் அருகே மர்மநபர்கள் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் சிசிடிவி கேமரா ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஆண் மற்றும் பெண் கோயிலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியலைத் திறக்க முயன்றனர். அப்போது சிசிடிவி கேமரா இருப்பதை அறிந்த அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.