புதுச்சேரியில் நடந்த தேசியக்கொடி பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில், புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பின் சார்பில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜெய்ஹிந்த் முழக்கத்தை எழுப்பினர்.
கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய தேசியக்கொடி பேரணி சம்பா கோயில் அருகே நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தின்போது 100 மீட்டர் நீளமுள்ள தேசியக்கொடியை இளைஞர்கள் ஏந்திச் சென்றனர்.