S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!
Sep 6, 2025, 04:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!

Web Desk by Web Desk
Jun 2, 2025, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூரில்  S-400  மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகளின் செயல்திறன் சிறப்பாக இருந்ததாகப் பாராட்டியுள்ள இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், கூடுதல் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவது குறித்து இரு நாடுகளுக்கிடையே  பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.  அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்களையும் முகாம்களையும் குறிவைத்து ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில்  துல்லியமான தாக்குதல்களை இந்தியா நடத்தியது. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவி இந்திய இராணுவம் ஆப்ரேஷன் சிந்தூரின் நோக்கத்தைச் சரியாக நிறைவேற்றியது.

அதனையடுத்து, பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளையும் ட்ரோன்களையும், நடுவானிலேயே இந்தியா முறியடித்தது. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவ முடியாமல் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.  இந்த பெருமை, S-400 வான் பாதுகாப்பு அமைப்பைச் சார்ந்தது என்று உலக அளவில் பாராட்டப் பட்டது.

இந்நிலையில் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், ஆப்ரேஷன் சிந்தூரில் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும்  பிரம்மோஸ் ஏவுகணைகளின் செயல்திறன் சிறப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தங்கள் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் ஒத்துழைத்து வருகின்றன என்றும் கூறியுள்ளார்.

S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் விநியோகம், T-90 டாங்கிகள் மற்றும் Su-30 MKI போர் விமானங்களின் உரிமம் பெற்ற உற்பத்தி, MiG-29 மற்றும் Kamov ஹெலிகாப்டர்களின் விநியோகம், INS விக்ரமாதித்யா பரிமாற்றம், இந்தியாவில் AK-203 துப்பாக்கிகளின் கூட்டு உற்பத்தி மற்றும் BrahMos ஏவுகணைகளின் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு திட்டங்களில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன.

இந்தியாவில் BrahMos ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட மாடலின் உற்பத்திக்கு ரஷ்யா தனது விரிவான தொழில்நுட்பத் திறனை  இந்தியாவுக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகளில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, உத்தரப்பிரதேசத்தில், புதிய மேம்பட்ட அதிநவீன BrahMos ஏவுகணை உற்பத்தி ஆலை கட்டப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக,2018 ஆம் ஆண்டு ‘சுதர்சன சக்ரம்’ என்று இந்திய ராணுவத்தால் அழைக்கப்படும் S-400  வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஐந்தை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டது. இது தொடர்பான இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் 5.43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2019-க்குப் பிறகு,   S-400 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா வாங்கியது.

அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்புக்கு இணையான S-400  நகரும் வான் பாதுகாப்பு அமைப்பாகும்.  சாலை வழியாகக் கொண்டு செல்ல முடியும் மற்றும் 5 முதல் 10 நிமிடங்களுக்குள் இதைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

Tags: S-400 வான் பாதுகாப்புS-400Brahmos Super: Russian Ambassador praises Indian Armyரஷ்ய துாதர் பாராட்டுபிரம்மோஸ் சூப்பர்
ShareTweetSendShare
Previous Post

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Next Post

வரும் 4-ம் தேதி மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்திய உறவை சீனாவிடம் இழந்து விட்டோம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies