விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அரங்கநாதர் கோயிலில் பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பிரமோற்சவ விழாவானது 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து நாள்தோறும் மூலவர் மற்றும் உற்சவருக்குச் சிறப்புத் திருமஞ்சன அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டத்தை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான், அதிமுக முன்னாள் எம்பி சேவல் ஏழுமலை ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர்.
விழாவின்போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அரங்கநாதரை ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.