நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்தத் தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 15-ம் தேதி நடைபெறவுள்ள நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்ட்டாக நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கானது நீதிபதிகள் சஞ்சய் குமார், என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்வை இரண்டு ஷிப்ட்டுகளாக நடத்தும்போது இரண்டு வினாத்தாள்களும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூற முடியாது எனவும், இரண்டு ஷிப்ட்டுகளாக தேர்வை நடத்துவது சரியல்ல எனவும் கூறிய நீதிபதிகள்,
நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்தி முடிக்கத் தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு உத்தரவிட்டனர்.