இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 2047-ம் ஆண்டுக்குள் 5 மடங்காக உயரும் என இந்தியத் தொழில் கூட்டமைப்பு மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், 2024-25-ம் நிதியாண்டில் 1.6 லட்சம் கோடி ரூபாயாக உள்ள இந்தியாவின் ராணுவத் தளவாட உற்பத்தி 2047-ம் ஆண்டில் 8.8 லட்சம் கோடி ரூபாயாக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 30,000 கோடி ரூபாயாக உள்ள இந்தியாவின் ராணுவ ஏற்றுமதி 2.8 லட்சம் கோடி ரூபாயாக உயரும் எனவும், அப்போது ராணுவத் தளவாட துறையில் உலகளவில் முன்னணி விநியோகஸ்தராக இந்தியா இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதே போல தற்போது 6.8 லட்சம் கோடி ரூபாயாக உள்ள இந்தியாவின் ராணுவ பட்ஜெட், 2047-ம் ஆண்டுக்குள் 31.7 லட்சம் கோடி ரூபாயாக உயரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ராணுவத்துக்குச் செலவிடுவதில் தற்போது 4-வது பெரிய நாடாக இருக்கும் இந்தியா, 3-வது பெரிய நாடாக உருவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.