கொந்தளிக்கும் மக்கள் : கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாகும் விளையாட்டு மைதானம்!
Sep 14, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொந்தளிக்கும் மக்கள் : கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாகும் விளையாட்டு மைதானம்!

Murugesan M by Murugesan M
May 31, 2025, 10:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவேற்காடு நகராட்சி மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கோலடி கிராமத்தில் பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் தமிழக அரசும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் முயற்சி செய்துவருவதாகப் புகார் எழுந்துள்ளது. விளையாட்டுத்திடலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாக மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கை குறித்தும் மக்களின் எதிர்ப்பு குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

திருவேற்காடு நகராட்சியில் எந்த ஒரு முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும் என்றாலும் அவர்கள் நாடக்கூடிய ஒரே மைதானம் இந்த கோலடி மைதானம் தான். எண்ணற்ற விளையாட்டு வீரர்களை உருவாக்கிய அத்தகைய விளையாட்டு மைதானத்தைக் கையகப்படுத்தியிருக்கும் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை, கடும் எதிர்ப்பை மீறியும் அங்குக் கழிவுநீர் சுத்திகரித்து நிலையத்தை அமைக்க முயற்சிப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 ஏக்கர் பரப்பளவில் ஏராளமான விளையாட்டு வீரர்களை உருவாக்கிய இந்த மைதானத்திற்குள் தற்போது யாரும் நுழைய முடியாத அளவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.  இதே விளையாட்டு மைதானத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முயன்ற போது எதிர்க்கட்சியாக இருந்து எதிர்ப்பு தெரிவித்த திமுக, ஆளுங்கட்சியான பின்பு அதனை அமைத்தே தீருவோம் என்ற பிடிவாதத்துடன் செயல்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பட்டியலின மக்கள் அதிகளவு வசிக்கும்  இப்பகுதியில் வளர்ச்சித் திட்டங்கள் எதையும் கொண்டுவராத திமுக அரசு, அதற்கு மாறாக அவர்கள் வசிக்கும் பகுதியில் திட்டமிட்டு இதுபோன்ற உடல்நிலைக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் திட்டங்களை ஊருக்கு நடுவில் கொண்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

மைதானத்திற்கு ஒருபுறம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளியும், மறுபுறம் திருவேற்காடு நகராட்சியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கோலடி ஏரியும் அமைந்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்லாமல் நிலத்தடி நீருக்கும் ஆபத்து விளைவிக்கும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடினால், காவல்துறை வலுக்கட்டாயமாகக் கைது செய்வதாகவும் பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊரின் நடுப்பகுதியில் திமுக அரசு கொண்டுவர முயற்சிப்பதின் பின்னணி அப்பகுதி மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: திருவேற்காடு நகராட்சிதமிழக அரசுAngry people: The playground is a sewage treatment plantவிளையாட்டு மைதானம்கொந்தளிக்கும் மக்கள்
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்டார்ஷிப் சோதனை தோல்வி : கேள்விக்குறியான செவ்வாய் கிரக பயண திட்டம்!

Next Post

இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2047-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக உயரும் – சிஐஐ, கேபிம்ஜி

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies