ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் புதுக்கோட்டை பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ணக் கொடி பேரணியின்போது காவல்துறைக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது..
ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், ராணுவ வீரர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் புதுக்கோட்டையில் பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர். குறிப்பிட்ட தூரம் வரை செல்ல போலீசார் அனுமதி வழங்கிய நிலையில், அதையும் தாண்டி பேரணி நடைபெற்றதாகவும் அனுமதியின்றி ட்ரோன் இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாஜகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசார் ட்ரோனை பறிமுதல் செய்தனர்.