தேனி மாவட்டம் போடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது துரைராஜபுரம். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது கை குழந்தையுடன் தேனியிலிருந்து கிளம்பி வந்த பேருந்தில் துரைராஜபுரம் செல்வதற்காகப் பயணித்துள்ளார்.
ஆனால் அந்த ஊரில் நிறுத்த மறுத்து விட்டதாகவும், கைக்குழந்தைகள் மற்றும் சுமைகளுடன் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிலிருந்து நடந்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாலும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உடனே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த போக்குவரத்து நெரிசலில் எம்பி தங்க தமிழ் செல்வன் சிக்கிக்கொண்டார். இதனையறிந்த அவர், போக்குவரத்து கிளை மேலாளர்களிடம் பேசி இப்பகுதியில் பேருந்துகள் நிறுத்திச் செல்ல வேண்டும் என்று கூறினார்.