நாடு முழுவதும் ஒரே நாளில் 511 பேருக்குக் கொரானா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 147 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கேரளா மற்றும் டெல்லியில் பாதிப்பு அதிகமாக உள்ளது எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 170 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.