மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலினின் ரோடு ஷோவிற்காக சாலைகளில் அமைக்கப்பட்ட தடுப்புகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மதுரையில் திமுக பொதுக் கூட்டத்திற்காக வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலின் சனிக்கிழமை ரோடு ஷோ நடத்த உள்ளார். இதற்காக மாநகரின் பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்புகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.