ரஷ்யா உடனான போர் பதற்றம் காரணமாக, தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் போலந்து ஈடுபட்டுள்ளது.
செப்டம்பரில் போலந்து எல்லைக்கு அருகில் பெலாரஸுடன் கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறும் என்று ரஷ்யா அறிவித்தததன் மூலம் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
எனவே, போலந்து தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மேலும், 2027 முதல் ஆண்டுதோறும் ஒரு லட்சம் மக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அறிவித்துள்ளார்.
பல்வேறு நாடுகளிடம் இருந்து துப்பாக்கிகள், பீரங்கிகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களை வாங்கும் முயற்சியில் போலந்து ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.