வேதனையில் பயணிகள் : பேருந்து நிலையத்தை எப்ப சார் திறப்பீங்க?
Sep 10, 2025, 01:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேதனையில் பயணிகள் : பேருந்து நிலையத்தை எப்ப சார் திறப்பீங்க?

Web Desk by Web Desk
May 31, 2025, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்மையில் முதலமைச்சரால் திறப்பு விழா கண்ட பேருந்து நிலையம் ஒன்று இதுவரை மூடப்பட்டே உள்ளது. அது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

பயணிகள் யாருமின்றி, பேருந்துகள் ஏதுவுமின்றி மயான அமைதியுடன் காணப்படும் இதுதான், அண்மையில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம். 2 வாரங்களுக்கு முன்பே திறப்பு விழா கண்டிருந்தாலும், இன்றுவரை இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற கேள்விக்கு நம்பகமான எந்த பதிலும் இல்லை.

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என 2  பேருந்து நிலையங்கள் உள்ளன. இவற்றால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதற்கான கட்டுமான பணிகள் அண்மையில் நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து,  மே 9ஆம் தேதி பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். ஆனால், 3 வாரங்களைக் கடந்த நிலையிலும் இதுவரை அந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

பெயருக்குத் திறப்பு விழா நடத்தப்பட்ட போதிலும்,  குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட  எந்த பணிகளும் முழுமை பெறாமல் உள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதுபோதாதென்று, கடந்த வாரம் பெய்த சிறிதளவு மழைக்கே பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கத் தொடங்கிவிட்டது. இதனால் திருச்சி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை முழுமையாகக் கட்டி முடிக்காமலே, அவசர அவ்வரசமாகத் திறப்பு விழா நடத்தியது ஏன்? எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கி உள்ளனர்.
இது குறித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ஜூன் 3 அல்லது  ஜூன் 14ம்  தேதி பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவித்தார்.

ஆனால், ஜூலை மாதம்தான் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவலும் ஒருபுறம் பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பஞ்சப்பூர்  ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்பது திருச்சி மக்களின் நீண்ட நாள் கனவாகும். ஆனால், அந்த கனவு நனவாவது தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டே உள்ளது.  பஞ்சப்பூரில் இருந்து எப்போது பேருந்துகள் இயக்கப்படும்?, அவசர அவசரமாகத் திறப்பு விழா நடத்தியது ஏன்?, கட்டுமான பணிகள் தரமான முறையில்தான் நடைபெற்றதா? என்பது போன்ற அடுக்கடுக்கான பல கேள்விகள் அணிவகுத்து நிற்கின்றன.

எனவே, அதிகாரிகள் இனியும் தாமதிக்காமல் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பேருந்து நிலையத்தை விரைந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதே திருச்சி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Passengers in distress: When will you open the bus stationsir?வேதனையில் பயணிகள்திருச்சியில் மத்திய பேருந்து நிலையம்
ShareTweetSendShare
Previous Post

பெண் சக்திக்கு சவால் விட்டது பயங்கரவாதிகளுக்கு ஆபத்தாக முடிந்தது : பிரதமர் மோடி

Next Post

உள்நாட்டு உற்பத்தியில் சிகரம் தொடும் பாரதம் : பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies