வேதனையில் பயணிகள் : பேருந்து நிலையத்தை எப்ப சார் திறப்பீங்க?
Jun 23, 2026, 05:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேதனையில் பயணிகள் : பேருந்து நிலையத்தை எப்ப சார் திறப்பீங்க?

Murugesan M by Murugesan M
May 31, 2025, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்மையில் முதலமைச்சரால் திறப்பு விழா கண்ட பேருந்து நிலையம் ஒன்று இதுவரை மூடப்பட்டே உள்ளது. அது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

பயணிகள் யாருமின்றி, பேருந்துகள் ஏதுவுமின்றி மயான அமைதியுடன் காணப்படும் இதுதான், அண்மையில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம். 2 வாரங்களுக்கு முன்பே திறப்பு விழா கண்டிருந்தாலும், இன்றுவரை இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற கேள்விக்கு நம்பகமான எந்த பதிலும் இல்லை.

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என 2  பேருந்து நிலையங்கள் உள்ளன. இவற்றால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதற்கான கட்டுமான பணிகள் அண்மையில் நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து,  மே 9ஆம் தேதி பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். ஆனால், 3 வாரங்களைக் கடந்த நிலையிலும் இதுவரை அந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

பெயருக்குத் திறப்பு விழா நடத்தப்பட்ட போதிலும்,  குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட  எந்த பணிகளும் முழுமை பெறாமல் உள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதுபோதாதென்று, கடந்த வாரம் பெய்த சிறிதளவு மழைக்கே பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கத் தொடங்கிவிட்டது. இதனால் திருச்சி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை முழுமையாகக் கட்டி முடிக்காமலே, அவசர அவ்வரசமாகத் திறப்பு விழா நடத்தியது ஏன்? எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கி உள்ளனர்.
இது குறித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ஜூன் 3 அல்லது  ஜூன் 14ம்  தேதி பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவித்தார்.

ஆனால், ஜூலை மாதம்தான் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவலும் ஒருபுறம் பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பஞ்சப்பூர்  ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்பது திருச்சி மக்களின் நீண்ட நாள் கனவாகும். ஆனால், அந்த கனவு நனவாவது தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டே உள்ளது.  பஞ்சப்பூரில் இருந்து எப்போது பேருந்துகள் இயக்கப்படும்?, அவசர அவசரமாகத் திறப்பு விழா நடத்தியது ஏன்?, கட்டுமான பணிகள் தரமான முறையில்தான் நடைபெற்றதா? என்பது போன்ற அடுக்கடுக்கான பல கேள்விகள் அணிவகுத்து நிற்கின்றன.

எனவே, அதிகாரிகள் இனியும் தாமதிக்காமல் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பேருந்து நிலையத்தை விரைந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதே திருச்சி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Passengers in distress: When will you open the bus stationsir?வேதனையில் பயணிகள்திருச்சியில் மத்திய பேருந்து நிலையம்
ShareTweetSendShare
Previous Post

பெண் சக்திக்கு சவால் விட்டது பயங்கரவாதிகளுக்கு ஆபத்தாக முடிந்தது : பிரதமர் மோடி

Next Post

உள்நாட்டு உற்பத்தியில் சிகரம் தொடும் பாரதம் : பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies