வேதனையில் பயணிகள் : பேருந்து நிலையத்தை எப்ப சார் திறப்பீங்க?
Aug 7, 2026, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேதனையில் பயணிகள் : பேருந்து நிலையத்தை எப்ப சார் திறப்பீங்க?

Murugesan M by Murugesan M
May 31, 2025, 06:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அண்மையில் முதலமைச்சரால் திறப்பு விழா கண்ட பேருந்து நிலையம் ஒன்று இதுவரை மூடப்பட்டே உள்ளது. அது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

பயணிகள் யாருமின்றி, பேருந்துகள் ஏதுவுமின்றி மயான அமைதியுடன் காணப்படும் இதுதான், அண்மையில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம். 2 வாரங்களுக்கு முன்பே திறப்பு விழா கண்டிருந்தாலும், இன்றுவரை இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற கேள்விக்கு நம்பகமான எந்த பதிலும் இல்லை.

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என 2  பேருந்து நிலையங்கள் உள்ளன. இவற்றால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதற்கான கட்டுமான பணிகள் அண்மையில் நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து,  மே 9ஆம் தேதி பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். ஆனால், 3 வாரங்களைக் கடந்த நிலையிலும் இதுவரை அந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

பெயருக்குத் திறப்பு விழா நடத்தப்பட்ட போதிலும்,  குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட  எந்த பணிகளும் முழுமை பெறாமல் உள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதுபோதாதென்று, கடந்த வாரம் பெய்த சிறிதளவு மழைக்கே பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கத் தொடங்கிவிட்டது. இதனால் திருச்சி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை முழுமையாகக் கட்டி முடிக்காமலே, அவசர அவ்வரசமாகத் திறப்பு விழா நடத்தியது ஏன்? எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கி உள்ளனர்.
இது குறித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ஜூன் 3 அல்லது  ஜூன் 14ம்  தேதி பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவித்தார்.

ஆனால், ஜூலை மாதம்தான் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவலும் ஒருபுறம் பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பஞ்சப்பூர்  ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்பது திருச்சி மக்களின் நீண்ட நாள் கனவாகும். ஆனால், அந்த கனவு நனவாவது தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டே உள்ளது.  பஞ்சப்பூரில் இருந்து எப்போது பேருந்துகள் இயக்கப்படும்?, அவசர அவசரமாகத் திறப்பு விழா நடத்தியது ஏன்?, கட்டுமான பணிகள் தரமான முறையில்தான் நடைபெற்றதா? என்பது போன்ற அடுக்கடுக்கான பல கேள்விகள் அணிவகுத்து நிற்கின்றன.

எனவே, அதிகாரிகள் இனியும் தாமதிக்காமல் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பேருந்து நிலையத்தை விரைந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதே திருச்சி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Passengers in distress: When will you open the bus stationsir?வேதனையில் பயணிகள்திருச்சியில் மத்திய பேருந்து நிலையம்
Share
Tweet
SendShare
Previous Post

பெண் சக்திக்கு சவால் விட்டது பயங்கரவாதிகளுக்கு ஆபத்தாக முடிந்தது : பிரதமர் மோடி

Next Post

உள்நாட்டு உற்பத்தியில் சிகரம் தொடும் பாரதம் : பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Related News

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

Load More

அண்மைச் செய்திகள்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies