கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடி கடல்பகுதியில் மிதக்கும் கண்டெய்னரை மீட்கும் பணியில் குஜராத் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கொச்சி துறைமுகம் அருகே கடந்த 24ம் தேதி லைபீரியா நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கியது.
இதனால் கப்பலில் இருந்த 643 கண்டெய்னர்களும் தண்ணீரில் மிதந்தன. இதில் பல கண்டெய்னர்களை அதிகாரிகள் மீட்ட நிலையில் சில கண்டெய்னர்கள் மட்டும் கேரள கடலோர பகுதிகளிலும், குமரி கடலோர பகுதிகளிலும் கரை ஒதுங்கின.
தற்போது வாணியக்குடி கடற்கரையில் ஒதுங்கிய கண்டெய்னரை மீட்பதற்காக குஜராத்தில் இருந்து குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அதன் படி குஜராத் மரைன் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் சென்டரை சேர்ந்த குழுவினர் ஜேசிபி உதவியுடன் கண்டெய்னரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.