பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற்றது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. முன்னதாக பாகிஸ்தான் மீதான அதிரடி நடவடிக்கை காரணமாக போர் சூழல் ஏற்பட்ட நிலையில் மே 7ம் தேதி நாடு முழுவதும் போர்க்கால சூழல் ஒத்திகை நடத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்கில் ஆபரேஷன் ஷீல்டு என்ற பெயரில் நேற்று போர்க்கால ஒத்திகை நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் கட்டடங்களில் பற்றிய தீயை அணைத்து மக்களை காப்பாற்றுவது போல ராணுவ வீரர்கள் தத்ரூபமாக ஒத்திகை மேற்கொண்டனர்.