ஒன்றிய அரசு என்பதே தவறு என்றும், அப்படி என்றால் மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா? என மகாராஷ்டிரா ஆளுநர் சிபி. ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு பிரிவினைவாதத்தை திணிக்கிறது என்றும், இந்த அரசின் எண்ணம் தவறாக உள்ளதாகவும் சாடினார். உங்களை விட நாடு மற்றும் நாட்டின் ஒற்றுமை முக்கியம் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் தேச விரோத சக்திகளை ஊக்குவிப்பது தான் பல அரசியல் கட்சிகளின் வேலையாக உள்ளது. சத்தீஸ்கர் நக்சலைட்டுகளால் முன்னாள் முதல்வர் கொல்லப்பட்டுள்ளார். urban நக்சலைட்டுகள் அதிகரித்து வருவது ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்தார்.
நக்சலைட்டுகள் ஒடுக்கப்பட வேண்டும் என்றும். எந்த தீவிரவாதமாக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டால் தான் தேச அமைதி மற்றும் நலனுக்கு நல்லது என்றும் அவர் தெரிவித்தார்.