திருச்சி மாவட்டம் கல்லணை அருகே ரவுடி படுகொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிளிக்கூடு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் முன்விரோதம் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய கபடி வீரரான பிரகாஷ் என்பவரை 2022ஆம் ஆண்டு, ரவுடி அசோக்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக தெரிகிறது.
இதனிடையே, இருதரப்பு தலைமையில் நடைபெற்ற கபடி போட்டியில் தகராறு ஏற்பட்டது. இதில், ரவுடி அசோக்குமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பயிற்சி வழக்கறிஞர், அவரது பெற்றோர், சகோதரர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.