அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 4-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 4 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கூட்டத்தில் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.