தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி திருப்பி அனுப்பப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நிதி ஒதுக்கீடு மற்றும் மாற்றப்படும் தன்மை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை இல்லை என்றும் தேவைப்படும்போது அதிகபட்ச நிதி பெறப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் முழுமையாக பயன்படுத்தாத நிதி, பிற திட்டங்களுக்கு மாற்றப்படுவதாக கூறியுள்ள தெற்கு ரயில்வே, தமிழ்நாடு, கேரளாவிற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகவே பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.