தெலங்கானா மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நாட்டின் முன்னேற்றத்திற்கு தெலங்கானா மாநிலம் எண்ணற்ற பங்களிப்புகளை ஆற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.தெலங்கானா மாநில வளர்ச்சிக்கு என்டிஏ அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தெலங்கானா மாநில மக்கள் வெற்றி மற்றும் செழிப்புடன் வாழ ஆசீர்வதிக்கப்படட்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.